என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்12 Jun 2019 11:20 AM GMT (Updated: 12 Jun 2019 11:20 AM GMT)
அயனாவரத்தில் போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் சோம சுந்தரம் 6-வது தெருவில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருபவர் நிர்மல்குமார். நேற்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் போட்டோ ஸ்டூடியோ கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமிராக்களை திருடி சென்றுவிட்டனர்.
இதே போல் அருகில் உள்ள சபீர் என்பவரின் செல்போன் கடையை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 செல்போன்களை அள்ளி தப்பினர்.
இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்றத்தூரை சேர்ந்தவர் அயூப். இவர் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரியில் செம்பு கம்பிகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு நிறுவனத்தின் குடோனில் இருந்த லோடு வேன் மற்றும் 2½ டன் காப்பர் கம்பிகளை திருச் சென்றுவிட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.
இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அயனாவரம் சோம சுந்தரம் 6-வது தெருவில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருபவர் நிர்மல்குமார். நேற்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் போட்டோ ஸ்டூடியோ கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமிராக்களை திருடி சென்றுவிட்டனர்.
இதே போல் அருகில் உள்ள சபீர் என்பவரின் செல்போன் கடையை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 செல்போன்களை அள்ளி தப்பினர்.
இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்றத்தூரை சேர்ந்தவர் அயூப். இவர் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரியில் செம்பு கம்பிகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு நிறுவனத்தின் குடோனில் இருந்த லோடு வேன் மற்றும் 2½ டன் காப்பர் கம்பிகளை திருச் சென்றுவிட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.
இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X