என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் வழக்கு- நீதிபதி சசிதரன் திடீர் விலகல்
Byமாலை மலர்11 Jun 2019 5:57 AM GMT (Updated: 11 Jun 2019 5:57 AM GMT)
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென விலகியுள்ளார்.
சென்னை:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதால், இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதியிடம் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து பிற்பகலுக்கு மேல் முடிவெடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X