என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? - ஆம் என்கிறது புள்ளிவிவரம்
Byமாலை மலர்8 Jun 2019 12:39 PM GMT (Updated: 8 Jun 2019 12:39 PM GMT)
இந்திமொழி வழி கல்விக்கு எதிராக மீண்டும் போர்க்குரல் எழுந்துள்ள நிலையில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்தி மொழியை கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.
சென்னை:
ஆறாம் வகுப்புக்கு மேல் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு சமீபத்தில் பரிந்துரை செய்தது. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், விரும்பாத மாநிலங்களில் நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று மத்திய அரசு பின்வாங்கியது.
இந்நிலையில், தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்தி மொழியை கற்பதில் மாணவ-மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, தட்சின பாரத் இந்தி பிரசார சபாவின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் இந்தி மொழி தேர்வு எழுதினர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கர்நாடகாவில் 60 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கேரளாவில் 21 ஆயிரம் மாணவ-மாணவியர்களும் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தி மொழி தேர்வு எழுதினர்.
கடந்த 2009-ம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் இந்தி தேர்வு எழுதி இருந்தனர். அந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பரவலாக கடந்த பத்தாண்டுகளில் இந்தி மொழியை கற்பதில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X