என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவறான கூட்டணி அமைத்ததால் பாராளுமன்ற தேர்தலில் தோற்றோம்- அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு
Byமாலை மலர்8 Jun 2019 5:20 AM GMT (Updated: 8 Jun 2019 5:20 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததால் தோற்றோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
சேதராப்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம். இதில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
இந்த தேர்தலில் தி.மு.க.வுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள் தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வெற்றிப் பெற்றால் ஆடம்பரமாக கொண்டோடுவதோ, தோல்வி அடைந்தால் சோர்ந்து விடுவதோ இல்லை. வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததின் விளைவாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம்.
இது மோடிக்கு எதிரான வாக்குகள்தான். அ.தி.மு.க. இதில் தோல்வியை சந்தித்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 40 வாக்குகள் சிறுபான்மையினர் வாக்குகள். அதனை அப்படியே இழந்து விட்டோம். இதனால் வெற்றி அவர்களுக்கு சாதகமாகி விட்டது.
கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அ.தி.மு.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும். தி.மு.க.வில் வெற்றி பெற்ற பலர் வழக்குகளில் உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் இடமிருக்கிறது.
தி.மு.க. கூட்டணி 38 எம்.பி.க்களை பெற்றுள்ளது, எங்களை அவர்கள் கேட்டதை போல் இப்போது நாங்கள் கேட்போம் தமிழகத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று.
2001-2006 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதிப்பு கூட்டு வரியை துணிச்சலோடு எதிர்த்தவர் அம்மா. இன்றைக்கு அது ஜி.எஸ்.டி.யாக உள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி. பொய்யை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று தி.மு.க. கனவு காண்பது ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கிளியனூர், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம். இதில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
இந்த தேர்தலில் தி.மு.க.வுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள் தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வெற்றிப் பெற்றால் ஆடம்பரமாக கொண்டோடுவதோ, தோல்வி அடைந்தால் சோர்ந்து விடுவதோ இல்லை. வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததின் விளைவாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம்.
கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அ.தி.மு.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும். தி.மு.க.வில் வெற்றி பெற்ற பலர் வழக்குகளில் உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் இடமிருக்கிறது.
தி.மு.க. கூட்டணி 38 எம்.பி.க்களை பெற்றுள்ளது, எங்களை அவர்கள் கேட்டதை போல் இப்போது நாங்கள் கேட்போம் தமிழகத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று.
2001-2006 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதிப்பு கூட்டு வரியை துணிச்சலோடு எதிர்த்தவர் அம்மா. இன்றைக்கு அது ஜி.எஸ்.டி.யாக உள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி. பொய்யை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று தி.மு.க. கனவு காண்பது ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கிளியனூர், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X