என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெகமத்தில் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயம்
கோவை:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மேகலா (வயது 25). இவர் திருப்பூர் அருள்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதற்கிடையே நெகமம் எஸ்.அய்யம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மணிகண்டன் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அவர் அங்கும் செல்லாதது தெரிய வந்தது.
இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இதேபோல் கோவை உலக நாதபெருமாள் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (33). இவரது மனைவி சத்யபிரியா (29), மகன் ரிஷ்தேவ்(6). சம்பவத்தன்று சத்யராஜ் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த மனைவி, மகனை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கததால் சரவணம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்