என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 65). இவர் பொன்னேரியில் உள்ள உறவினரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆரணி-புதுவாயல் நெடுஞ் சாலையில் கொள்ளுமேடு என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் ரகுபதி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெங்கல் அருகே பாகல்மேடு கிராமத்தில் தனியார் செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சைதன்யமாஜி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சைதன்ய மாஜியின் மகன் சஞ்சய் (வயது 20) என்பவர் டிராக்டர் ஒன்றின் மீது ஏறி நின்றார். அப்போது டிராக்டர் இயங்கியதில் அவர் சிக்கிக் கொண்டார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்று சஞ்சய் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்