என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயிதே மில்லத் 124வது பிறந்தநாள் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
Byமாலை மலர்5 Jun 2019 3:16 AM GMT (Updated: 5 Jun 2019 3:26 AM GMT)
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில், அரசியல் நிர்ணய சபையில், ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என காயிதே மில்லத் குரல் கொடுத்துள்ளார். இன்று மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில், இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என இந்நாளில் உறுதியேற்கிறேன். தமிழர்களின் எதிர்ப்பால் மத்திய அரசு மும்மொழி கொள்கையை கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X