search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்- கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்
    X

    பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்- கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

    ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

    “பப்ஜி” எனும் ஆன்லைன் விளையாட்டில் புதிய பதிப்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான “காஃபாவை” போன்ற மாதிரி வடிவத்தை உருவாக்கி இழிவுபடுத்தி உள்ளனர். இது இஸ்லாமியர்களை கொந்தளிக்க செய்து உள்ளது. எனவே “பப்ஜி” விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×