என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 வயது சிறுமிக்கு திருமணம்- உறவுக்கு மறுத்ததால் சூடு வைத்து கொடுமை
Byமாலை மலர்3 Jun 2019 11:31 AM GMT (Updated: 3 Jun 2019 11:31 AM GMT)
தேனி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து சூடு வைத்து கொடுமை படுத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்த சின்னசாமி மகன் ஜெகதீசன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி 16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சிறுமியுடன் உறவுக்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.
இது குறித்து ஜெகதீசன் தனது தாயாரிடம் தெரிவிக்கவே அவர் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைல்டு லைன் அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தார். படுகாயம் அடைந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவர் ஜெகதீசன், மாமனார் சின்னசாமி, மாமியார் வேலுத்தாய் மற்றும் உறவினர்கள் பேச்சியப்பன், மாரீஸ்வரி, மணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்த சின்னசாமி மகன் ஜெகதீசன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி 16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சிறுமியுடன் உறவுக்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.
இது குறித்து ஜெகதீசன் தனது தாயாரிடம் தெரிவிக்கவே அவர் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைல்டு லைன் அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தார். படுகாயம் அடைந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவர் ஜெகதீசன், மாமனார் சின்னசாமி, மாமியார் வேலுத்தாய் மற்றும் உறவினர்கள் பேச்சியப்பன், மாரீஸ்வரி, மணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X