என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்1 Jun 2019 4:28 PM GMT (Updated: 1 Jun 2019 4:28 PM GMT)
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவர் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கம்பை நல்லூரில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்ற தனபால், திருப்பதி ஆகிய 2 பேரிடம் இருந்து தலா 10 மதுபாட்டில்களை கம்பைநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
ஒகேனக்கல்லில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற சின்னசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X