search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்- கேபி முனுசாமி
    X

    மத்திய மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்- கேபி முனுசாமி

    மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது குறித்து அ.தி.மு.க. தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது குறித்து அ.தி.மு.க. தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி தரும் என்று நம்பிக்கை உள்ளது.

    தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×