search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடத்தில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
    X

    பல்லடத்தில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

    பல்லடத்தில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு சந்தியா என்பவர் வேலை பார்த்து வந்தார். சந்தியாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கும், சந்தியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    சந்தியாவின் குழந்தையை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்லடம் லட்சுமி மில் பகுதியில் மணிகண்டனுடன் சந்தியா தனியாக வாடகை வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் தனது கணவர் மணிகண்டனை காணவில்லை என்று அவரது மனைவி மைதிலி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.

    சந்தியா தனது குழந்தையை பார்த்து விட்டு வருவதாக ஈரோடு சென்றார். அங்கு மனம் மாறி திரும்பி வராமல் இருந்தார். சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு

    மீண்டும் வருமாறு மணிகண்டன் அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்து விட்டார்.

    இதனால் மனம் உடைந்த மணிகண்டன் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×