என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டமங்கலம் அருகே தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து- 20பேர் படுகாயம்
Byமாலை மலர்15 May 2019 11:43 AM GMT (Updated: 15 May 2019 11:43 AM GMT)
கண்டமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று வளவனூர், மடுகரை வழியாக புதுவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை காத்தவராயன் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு அந்த பஸ் கண்டமங்கலம் அருகே அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த பஸ் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று வளவனூர், மடுகரை வழியாக புதுவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை காத்தவராயன் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு அந்த பஸ் கண்டமங்கலம் அருகே அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த பஸ் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X