என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கக் கடலில் 29ம் தேதி புயல் உருவாகும்- சென்னை வானிலை மையம் தகவல்
Byமாலை மலர்23 April 2019 7:39 AM GMT (Updated: 23 April 2019 7:39 AM GMT)
வங்கக் கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDPredicts
சென்னை:
தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 10 செமீ மழை பெய்துள்ளது. பெரியகுளம், மேட்டூர், திருவண்ணாமலை, ஓசூர், தம்மம்பட்டி, தேனி மாவட்டம் கூடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்திய பெருங்கடல்- தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது. இது 27-ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதி முதல் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMDPredicts
தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 10 செமீ மழை பெய்துள்ளது. பெரியகுளம், மேட்டூர், திருவண்ணாமலை, ஓசூர், தம்மம்பட்டி, தேனி மாவட்டம் கூடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதி முதல் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMDPredicts
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X