search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.கே.நகரில் காதல் மனைவி கத்தியால் குத்திக் கொலை- கணவர் வெறிச்செயல்
    X

    கே.கே.நகரில் காதல் மனைவி கத்தியால் குத்திக் கொலை- கணவர் வெறிச்செயல்

    சென்னை கே.கே. நகர் அடுத்த நெசப்பாக்கத்தில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24) எலக்ட்ரிசியன்.

    இவரது மனைவி சந்தியா (20). இவர்கள் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன் அவரது தாய் சரிதா தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் அருண்குமார்-சந்தியா இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் கத்தியால் சந்தியா தொண்டையில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா சுருண்டு விழுந்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சந்தியாவின் தாய் சரிதாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள்குமாரை கைது செய்தனர்.

    சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா? என அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×