search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி கண்முன்னே மளிகை கடைகாரரிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள்
    X

    மனைவி கண்முன்னே மளிகை கடைகாரரிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

    கிருஷ்ணகிரியில் மனைவி கண்முன்னே மளிகை கடைகாரரிடம் செல்போன் மற்றும் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சாமிசெட்டி தெருவை சேர்ந்தவர் செய்யது(37), இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தனது சொந்த வேலையாக மனைவியுடன் தனது பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி செல்லும்போது கிருஷ்ணகிரியில் சென்னை பை-பாஸ் சாலையில் தண்டேகுப்பம் பகுதியில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கதக்க 2வாலிபர்கள் இவர்களை வழி மறித்து செய்யது-விடமிருந்த பணம் ரூ700-யும் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்து கொண்டு தலை மறைவாகி விட்டனர். 

    பின்னர் அதிர்ச்சியடைந்த செய்யது கிருஷ்ணகிரி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடி வருகிறார்.
    Next Story
    ×