search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு அனுமதியின்றி சந்துக்கடை நடத்திய பெண்கள் உள்பட 5 பேர் கைது
    X

    அரசு அனுமதியின்றி சந்துக்கடை நடத்திய பெண்கள் உள்பட 5 பேர் கைது

    சேலம் கருப்பூர் அருகே அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூரை அடுத்த பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் தைலம்மாள் (வயது 70). இவர் உள்பட கட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லிகா (55), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாந்தா (50), கந்தசாமி (60), சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன்(32) ஆகியோர் அரசு அனுமதியின்றி சந்துக்கடை வைத்து நடத்தியதாக தெரிகிறது.

    இதை அறிந்த கருப்பூர் போலீசார், பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய அவர்கள் 5 பேரையும் கருப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews

    Next Story
    ×