என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு அனுமதியின்றி சந்துக்கடை நடத்திய பெண்கள் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்12 March 2019 5:19 PM GMT (Updated: 12 March 2019 5:19 PM GMT)
சேலம் கருப்பூர் அருகே அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பூர்:
சேலம் கருப்பூரை அடுத்த பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் தைலம்மாள் (வயது 70). இவர் உள்பட கட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லிகா (55), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாந்தா (50), கந்தசாமி (60), சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன்(32) ஆகியோர் அரசு அனுமதியின்றி சந்துக்கடை வைத்து நடத்தியதாக தெரிகிறது.
இதை அறிந்த கருப்பூர் போலீசார், பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய அவர்கள் 5 பேரையும் கருப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X