search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொட்டிலில் சிக்கி குழந்தை மூச்சு திணறி பலி
    X

    தொட்டிலில் சிக்கி குழந்தை மூச்சு திணறி பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தொட்டிலில் தூங்க வைத்த குழந்தை மூச்சு திணறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பரசுராம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவர் கட்டிட கண்ட்ரக்டர். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு தினேஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.

    கடந்த 5-ந் தேதி குழந்தையை கல்பனா தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    அப்போது குழந்தை தொட்டிலில் சுற்றி கொண்டதில் மூச்சு திணறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை மயங்கியது.

    சிறிது நேரம் கழித்து கல்பனா வீட்டிற்கு வந்து பார்த்தபோது தினேஷ் குழந்தை மயங்கி கிடந்தது. உடனே அவர் குழந்தையை மீட்டு தருமபுரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×