search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்தவர் மர்ம மரணம்
    X

    திண்டுக்கல் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்தவர் மர்ம மரணம்

    திண்டுக்கல் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் லெட்சுமண புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீர் பாட்டிலால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சித்ரா வேறு ஒருவருடன் ஓடி விட்டார்.

    சிறையில் இருந்த செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இன்று காலை லெட்சுமணபுரம் அருகே தனது தாய் வீட்டு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×