என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்தவர் மர்ம மரணம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் லெட்சுமண புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீர் பாட்டிலால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சித்ரா வேறு ஒருவருடன் ஓடி விட்டார்.
சிறையில் இருந்த செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இன்று காலை லெட்சுமணபுரம் அருகே தனது தாய் வீட்டு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்