search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவைப்புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
    X

    கோவைப்புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை திருட்டு

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 35 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப் புதூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு(வயது 57). வங்கி அதிகாரி.

    இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாநகராட்சி ஊழியர்கள் என கூறிக் கொண்டு 2 பேர் வந்துள்ளனர். அப்போது வீட்டில் அவரது மாமியார் தேவயானி (72) மட்டும் இருந்துள்ளார்.

    அவரிடம் வீட்டை அளக்க வேண்டும் என கூறி உள்ளனர். பின்னர் 2 பேரும் டேப்பை பிடித்தவாறு வீட்டுக்குள் பல அறைகளுக்கும் சென்று அளவீடு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 35 பவுன் நகைள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ்பாபு இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    மாநகராட்சி ஊழியர்கள் என கூறி வந்த 2 பேர் தான் நகைகளை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×