என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பணம் திருடிய பெண் கைது
Byமாலை மலர்22 Feb 2019 11:38 AM GMT (Updated: 22 Feb 2019 11:38 AM GMT)
தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பெண் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எலவடை பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 25).
இவர் நேற்று உறவினர் திருமணத்திற்காக சேலம் சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் நின்ற போது சித்ரா அருகில் உட்கார்ந்திருந்த பெண் அவசர, அவசரமாக படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.
அப்போது சந்தேகம் அடைந்த சித்ரா தனது கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. இந்த பணத்தை அவர் திருடிக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கியது தெரியவந்தது.
இதனால் சித்ரா சத்தம் போடவோ பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பணத்தை திருடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் சுமதி(50) என்பதும், ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடைய மனைவி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சுமதியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எலவடை பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 25).
இவர் நேற்று உறவினர் திருமணத்திற்காக சேலம் சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் நின்ற போது சித்ரா அருகில் உட்கார்ந்திருந்த பெண் அவசர, அவசரமாக படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.
அப்போது சந்தேகம் அடைந்த சித்ரா தனது கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. இந்த பணத்தை அவர் திருடிக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கியது தெரியவந்தது.
இதனால் சித்ரா சத்தம் போடவோ பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பணத்தை திருடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் சுமதி(50) என்பதும், ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடைய மனைவி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சுமதியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X