search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீளமேட்டில் அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை திருட்டு
    X

    பீளமேட்டில் அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை திருட்டு

    கோவை பீளமேட்டில் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி ரோடு, பி.எஸ்.ஜி. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம மூர்த்தி (வயது 58). இவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் வெளியே சென்றார்.

    மாலையில் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    ராமமூர்த்தி குடும்பத்துடன் வெளியே செல்வதை கண்காணித்து மர்மநபர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×