என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி
Byமாலை மலர்19 Feb 2019 1:39 PM GMT (Updated: 19 Feb 2019 1:39 PM GMT)
வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகாசி பெண் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.
இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.
இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X