search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே கர்ப்பிணி விஷம்குடித்து தற்கொலை
    X

    பெரம்பலூர் அருகே கர்ப்பிணி விஷம்குடித்து தற்கொலை

    பெரம்பலூர் அருகே கர்ப்பிணி பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஜானகிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜானகி பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜானகியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் ஜானகி 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்
    Next Story
    ×