search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - திருமாவளவன்
    X

    பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - திருமாவளவன்

    பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

    காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், காலவிரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டு மின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan

    Next Story
    ×