என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
Byமாலை மலர்5 Feb 2019 4:55 PM GMT (Updated: 5 Feb 2019 4:55 PM GMT)
புதுக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
புதுக்கடை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வர்ட்.
இவர், நேற்று முஞ்சிறை பகுதியில் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட், ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மோட்டார் சைக்கிளால் இடித்து கொன்று விடுவதாக கூறி மிரட்டினார். மேலும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் புதுக்கடையை அடுத்த புலிநின்ற விளை பகுதியைச் சேர்ந்த அஜின் (வயது 26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர் மீது 294(பி), 353, 506(வீவீ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
புதுக்கடை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வர்ட்.
இவர், நேற்று முஞ்சிறை பகுதியில் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட், ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மோட்டார் சைக்கிளால் இடித்து கொன்று விடுவதாக கூறி மிரட்டினார். மேலும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் புதுக்கடையை அடுத்த புலிநின்ற விளை பகுதியைச் சேர்ந்த அஜின் (வயது 26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர் மீது 294(பி), 353, 506(வீவீ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X