search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
    X

    வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

    புதுக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    புதுக்கடை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வர்ட்.

    இவர், நேற்று முஞ்சிறை பகுதியில் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட், ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மோட்டார் சைக்கிளால் இடித்து கொன்று விடுவதாக கூறி மிரட்டினார். மேலும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார்.

    இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் புதுக்கடையை அடுத்த புலிநின்ற விளை பகுதியைச் சேர்ந்த அஜின் (வயது 26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர் மீது 294(பி), 353, 506(வீவீ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×