search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவர் பலி
    X

    மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவர் பலி

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    போரூர்:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் அமுதன். ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது மகன் அழகு சுந்தரம் (வயது 18) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அழகுசுந்தரம் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். எம்.எம். டி.ஏ. காலனி மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையம் அருகே சென்ற போது அந்த வழியே சென்ற மாநகர பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அழகுசுந்தரம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×