search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் அதிக அளவில் பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
    X

    திருச்சியில் அதிக அளவில் பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

    கோர்ட் உத்தரவால் திருச்சியில் அதிக அளவில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். #Jactogeo
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தூண்டியதாக 48 ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நேற்று திருச்சி உறையூர் மாநகராட்சி பள்ளி உள்பட சில பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் பூட்டப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் வந்திருந்த ஒரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திண்ணைகளில் பாடம் எடுத்தனர். இன்று 8-வது நாளாக திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிட்டால் அந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் நேற்றைய கூட்டத்தை விட இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் இன்று காலை பணிக்கு திரும்பியிருந்தனர்.

    ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #Jactogeo
    Next Story
    ×