search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய் வாங்கியதில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர்
    X

    நெய் வாங்கியதில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர்

    நெய் வாங்கியது தொடர்பாக வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தென்றல் நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 39).

    இவர் பால்பொருட்கள் வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நெய் வாங்கி உள்ளார். இதற்கு ரூ.10 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு, மீதி ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். பல முறைகேட்டும் அந்தோணிராஜ் பணத்தை கொடுக்கவில்லை.இதனால் ஏமாற்றமடைந்த பாலாஜி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் அந்தோணி ராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தோணி ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் செட்டிப்பாளையத்தில் ஒரு அலுவலகம் அமைத்துள்ளார். மோசடி புகாருக்கு பின் அவர் அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×