என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திரும்பிப்போ மோடி என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் - திருநாவுக்கரசர்
சென்னை:
பிரதமர் மோடி இன்று மதுரை வந்தார். அவருடைய வருகைக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ‘‘கோ பேக் மோடி’’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டன. இது இந்தியா முழுக்க டிரெண்டிங் ஆனது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
திரும்பிப்போ மோடி என்பது தமிழகத்தின் குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் குரல். எதுவுமே செய்யாத மோடி பதவியை விட்டு போகவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதன் வெளிபாடுதான் இந்த பதிவுகள்.
தமிழகத்தில் புயல் பாதித்த நேரத்திலும் சரி, தூத்துக்குடிச் சம்பவத்திலும் சரி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதவர், தமிழகத்தை திரும்பி பார்க்காதவர். எனவே திரும்பிப்போ என்று சொல்லாமல் என்ன செய்வார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் அவருக்கு இதே நிலைதான் ஏற்படும். ஓட்டு கேட்டு வராதீர்கள். நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றுதான் சொல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து பிற்பட்டோர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு பிற்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் டி.ஏ.நவீன் தலைமை தாங்கினார். டெல்லி பிரதிநிதிகள் ரோதஸ் பசோயா, மோகன் நாயுடு, சிரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Thirunavukkarasar #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்