என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கட்சியில் சேரும்படி அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை- தமிழிசை விளக்கம்
சென்னை, ஜன.22-
திருச்சியில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார். இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் எந்தக் கட்சி மேடைகளிலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் இதுபற்றி டாக்டர் தமிழிசை இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் அஜித்தை கட்சிக்கு வரும்படி அழைக்கவில்லை. எங்கள் கட்சியில் சேருவார் என்றும் சொல்லவில்லை.
நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்ற முறையில் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மனிதாபிமானத்துடன் அவர் செய்த உதவியை பாராட்டினேன். நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்று குறிப்பிட்டேன். அழைக்கவில்லை. இது தவறா? அவர்கள் நடித்து கொண்டிருந்தால் நடித்து கொண்டிருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்