search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே தனியார் பஸ் மோதி 2  பேர் பலி
    X

    நாமக்கல் அருகே தனியார் பஸ் மோதி 2 பேர் பலி

    நாமக்கல் அருகே தனியார் பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்ன நடுப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 27) கூலி தொழிலாளி.

    சேலம் காட்டுவளவு நடுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (30). இரு சக்கர வாகன மெக்கானிக். நண்பர்களான 2 பேரும் திருநள்ளார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இன்று காலை நாமக்கல் வலையப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×