search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் கார் மோதி கிளார்க் பலி
    X

    கிருஷ்ணகிரியில் கார் மோதி கிளார்க் பலி

    கிருஷ்ணகிரியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த் கிளார்க் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஜீனூர் பகுதியைச் சேர்ந்தவர் கெம்பன் மகன் காவேரியப்பன் (57). இவர் கலெக்டர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று மதியம் தனது பைக்கில் ஓசூர்-கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ரோட்டில் பின்னால் வந்த கார் காவேரியப்பன் மீது மோதியது. இதில் காவேரியப்பன் பலத்த காயமடைந்தார். 

    காயமடைந்தவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவேரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×