search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர் மின்னழுத்த கோபுர அமைக்க எதிர்ப்பு - வாழப்பாடியில் புல் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்
    X

    உயர் மின்னழுத்த கோபுர அமைக்க எதிர்ப்பு - வாழப்பாடியில் புல் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

    வாழப்பாடியில் உயர் மின்னழுத்த கோபுர அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புல் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாழப்பாடி:

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரத்தில் புதைவட முறையில் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கடந்த 17-ந்தேதி முதல், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    10-வது நாளாக இன்று கால்நடைகளை போல மண்டியிட்டு புல் தின்னும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். விவசாயிகள் சங்க கூட்டியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில், கால்நடைகளை போல தரையில் மண்டியிட்டு, கால்நடைகளுடன் சோளத்தட்டை புல் தின்னும் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

    பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தியும், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இதுவரை அரசு முன்வரவில்லை. உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, புதைவட முறையில் சாலையோரத்தில் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழக அரசு அறிவிக்கும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #tamilnews
    Next Story
    ×