search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்து டிரைவர் பலி
    X

    மண்ணச்சநல்லூர் அருகே பாம்பு கடித்து டிரைவர் பலி

    மண்ணச்சநல்லூர் அருகே வயல் வெளிக்கு சென்ற டிரைவரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் அருகே உள்ள பூணாம்பாளையம் ஊர்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தமிழரசன் (வயது 23), கார் டிரைவர்.

    இவர் கடந்த 13-ந் தேதி ஊரின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மருத்துமனையில் சிகிச்சைபெற்று விட்டு வீடு திரும்பினார். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு டாக்டர்கள் சிகிச்சைகள் மேற்கொண்டும் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு அவரின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் அவரின் சாவுக்கான காரணம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Next Story
    ×