search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநில தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது - கிருஷ்ணசாமி
    X

    5 மாநில தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது - கிருஷ்ணசாமி

    5 மாநில தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்காது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults

    திண்டுக்கல்:

    புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் வினயை சந்தித்து தேவேந்திர குல வேளாளர் ஜாதியை பட்டியல் இனத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என கிராம மக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக அளித்தார். அதன் பின் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    5 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சினைகளை எதிரொலித்தே அமையும். எனவே இதற்கும் பாராளுமன்ற  தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது.


    இந்த முடிவுகள் பாராளுமன்ற  தேர்தலில் எதிரொலிக்காது. இருந்தபோதும் தற்போது ஏற்பட்ட தோல்வியை பா.ஜ.க. எச்சரிக்கையாக கருதி வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults

    Next Story
    ×