என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயலால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தால் விபத்து அபாயம் - பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்10 Dec 2018 10:26 AM GMT (Updated: 10 Dec 2018 10:26 AM GMT)
கஜா புயலால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பள்ளியஅக்ரஹாரம் மின்பகிர்மான வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரு மின் கம்பங்கள் தெருவோரம் உள்ள வீடுகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்திலும் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
குண்டூர் கிராமத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. அவை தற்போது வீசிய கஜா புயலால் மேலும் சாய்ந்து விட்டது. எந்த நேரத்திலும் வீட்டின் மீது விழுந்தது விடும் அபாயம் உள்ளது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். வெண்ணுகுடி, எடக்குடி உதாரமங்களம் உள்பட பல கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பள்ளியஅக்ரஹாரம் மின்பகிர்மான வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரு மின் கம்பங்கள் தெருவோரம் உள்ள வீடுகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்திலும் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
குண்டூர் கிராமத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. அவை தற்போது வீசிய கஜா புயலால் மேலும் சாய்ந்து விட்டது. எந்த நேரத்திலும் வீட்டின் மீது விழுந்தது விடும் அபாயம் உள்ளது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். வெண்ணுகுடி, எடக்குடி உதாரமங்களம் உள்பட பல கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X