search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம் தொடரும் - அய்யாக்கண்ணு பேட்டி
    X

    விவசாயிகள் போராட்டம் தொடரும் - அய்யாக்கண்ணு பேட்டி

    விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest


    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் சென்று நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு பிரதமர் மோடி செவி சாய்க்க வில்லை.


    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும். எல்லாவித போராட்டங்களையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest

    Next Story
    ×