என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 75-ஆக உயர்வு
Byமாலை மலர்25 Nov 2018 10:31 AM GMT (Updated: 25 Nov 2018 10:31 AM GMT)
கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. #Dengue #Swineflu
கோவை:
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்ப சாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார்.
இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Dengue #Swineflu
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்ப சாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார்.
இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Dengue #Swineflu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X