என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலவச காலணி டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Byமாலை மலர்22 Nov 2018 10:50 AM GMT (Updated: 22 Nov 2018 10:50 AM GMT)
இலவச காலணி டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவிட்டது. #ChennaiHighCourt
சென்னை:
2018-19-ம் கல்வியாண்டுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.
ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம் சன் பாலிமர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
விதிமுறைகளை மீறி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காலணி தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt
2018-19-ம் கல்வியாண்டுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.
ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம் சன் பாலிமர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
விதிமுறைகளை மீறி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காலணி தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X