search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமுதியில் அக்காள்-தங்கை கடத்தல்: போலீசார் விசாரணை
    X

    கமுதியில் அக்காள்-தங்கை கடத்தல்: போலீசார் விசாரணை

    கமுதியில் அக்காள்- தங்கையை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி முனீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் நித்யா (வயது 19). இவரது தங்கை சத்யா. இவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று கடைக்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நித்யா, சத்யாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பலன் இல்லை.

    இதுகுறித்து அவர்கள் கமுதி போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து சகோதரிகளை கடத்தி சென்றது யார்? எதற்காக கடத்தப்பட்டார்கள்? அல்லது அவர்களாகவே சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×