search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
    X

    திண்டுக்கல்லில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்

    திண்டுக்கல்லில் குழாய் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகிறது. கழிவு நீரோடு சேர்ந்து சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் அணை மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இருந்த போதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் கரூர் மாவட்டத்தில் இருந்து எரியோடு, குஜிலியம்பாறை, வடமதுரை, தாடிக்கொம்பு வழியாக திண்டுக்கல் மற்றும் நத்தத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்த குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிய போதும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சரி செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே கூட்டுறவு பண்டகசாலை, ரேசன் கடை உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது.

    கழிவு நீரோடு சேர்ந்து சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் விரைந்து குழாயை சீரமைக்க வேண்டும். தண்ணீரை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×