search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் நடிகை கஸ்தூரி புனித நீராடிய காட்சி.
    X
    குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் நடிகை கஸ்தூரி புனித நீராடிய காட்சி.

    எல்லா துறைகளிலும் பாலியல் பிரச்சனை உள்ளது- நடிகை கஸ்தூரி

    குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளதாக நடிகை கஸ்தூரி கூறினார். #MeToo #Kasthuri
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரி இன்று மதியம் நெல்லை வந்தார். பின்னர் அவர் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருட்சிக ராசிக்குரிய நதி தாமிரபரணி. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று வரை இதன் சிறப்புகள் எனக்கு தெரியாமல் இருந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு வந்த பிறகே அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய ராசியும் விருட்சிகம் தான். எனவே இங்கு வந்து நீராடினேன்.


    பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளது.

    இதுதான் மீ டூ இயக்கத்தின் மூலம் வெளிவருகிறது. பெண்களுக்கு விரைவில் சம நீதி கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. அதன் முதல்படி தான் இன்றைய நிகழ்வுகள். அரசு சட்டங்கள் உள்ளது. அது சரியான திசையில் சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Kasthuri
    Next Story
    ×