search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மடத்துப்பட்டியில் கோவில் கட்ட ஸ்டெர்லைட் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி
    X

    மடத்துப்பட்டியில் கோவில் கட்ட ஸ்டெர்லைட் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி

    தூத்துக்குடி மாவடத்தில் உள்ள மடத்துப்பட்டியில் கோவில் கட்ட ஸ்டெர்லைட் சார்பில் ரூ.100 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பத்திரகாளியம்மன் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நிதி உதவி கோரி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கோவில் கட்டுமான பணிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மடத்துப்பட்டியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    இந்த தொடக்க நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணன், குமாரவேந்தன், நாகராஜ், ஜாய்ஸ், நிஷின் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பத்திரகாளியம்மன் கோவில் அமைப்பு நிர்வாக கமிட்டி தலைவர் துரைராஜ், செயலாளர் ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். #Sterlite
    Next Story
    ×