search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #EdappadiPalaniswami
    மதுரை:

    அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மதுரை மண்டலத்துக்கு அதிக பஸ்களை வழங்கி உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுகலாம். அவர் தலைவர்களின் வாரிசாக வந்தவர் அல்ல.

    அவர் மீது வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை தி.மு.க.வினர் சுமத்தி உள்ளனர். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.


    முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு இருந்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றால் எந்த மாநிலத்திலும் முதல்- அமைச்சர் பதவியில் இருக்க முடியாது.

    அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள்.

    ஏற்கனவே 2ஜி முறைகேடு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோர் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டபோது கருணாநிதி பதவி விலகினாரா?

    நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூற தி.மு.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை. பொய் புகார்களை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #EdappadiPalaniswami
    Next Story
    ×