search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் எச்சரிக்கை எதிரொலி - 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    X

    புயல் எச்சரிக்கை எதிரொலி - 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

    ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் இன்று இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. #ExpressTrain
    சென்னை:

    ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22801) ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22801) ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட இருந்த திருவனந்தபுரம் சென்டிரல்-சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ExpressTrain
    Next Story
    ×