search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறில் கல்லூரி மாணவி மாயம்
    X

    திருவையாறில் கல்லூரி மாணவி மாயம்

    திருவையாறில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    திருவையாறு:

    திருவையாறு அடுத்த திங்களூர் தெற்குதெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகள் வினோதினி (வயது 20). இவர் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரிக்கு வந்தவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று திருவையாறு போலீசில் வெங்கடாசலம் புகார் செய்தார். 

    அதன்பேரில் திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி வினோதினியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×