search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணை தாக்கிய மாமனார் உள்பட 2 பேர் கைது
    X

    இளம்பெண்ணை தாக்கிய மாமனார் உள்பட 2 பேர் கைது

    சேலத்தில் இளம்பெண்ணை தாக்கிய மாமனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்டேஷ் (வயது 36). இவரது மனைவி ரஞ்சனா செல்லம்(34). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஈரோட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று விநாயகர் சதுர்த் தியையொட்டி சங்ககிரியில் உள்ள வீட்டிற்கு வெங்கடேஷ், அவரது தந்தை குணசேகரன் (64) ஆகியோர் உறவினர்களுடன் வந்தனர். அவர்கள் ரஞ்சனாவிடம் குழந்தைகளின் துணிகளை எடுத்து தருமாறு கேட்டனர். அதற்கு, ரஞ்சனா தனது குழந்தைகளை இங்கு அழைத்து வருமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரஞ்சனாவை தாக்கியதாக தெரிகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் குணசேகரன் மற்றும் தீபன்(30) ஆகியோரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×