search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம்-புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீடிப்பு
    X

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம்-புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல் நீடிப்பு

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் - புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவலை நீடித்து இலங்கை கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.#Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

    இதேபோல கடந்த மாதம் 22-ந்தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்துச் சென்றது.

    கைதான தமிழக மீனவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14-ந்தேதி வரை (இன்று) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து 8 பேரும் இன்று மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படாததால் 8 பேரின் காவலையும் வருகிற 26-ந்தேதி வரை நீடித்து நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். #Fishermen #SriLankaNavy

    Next Story
    ×