என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
Byமாலை மலர்10 Sep 2018 12:21 PM GMT (Updated: 10 Sep 2018 12:21 PM GMT)
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி ஏலமானது மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்தவாரம் மூலனூர் மற்றும் வேளாம்பூண்டி, சின்னமருதூர், கிளாங்குண்டல், வடுகபட்டி, கன்னிவாடி, பொன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிர்செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
இந்த பருத்திகளை வாங்குவதற்காக அன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், புஞ்சைப் புளியம்பட்டி, பல்லடம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் 247 விவசாயிகள் தங்கள் விளை நிளங்களில் விளைந்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
இந்த வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் முதல் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.6390-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.4500-க்கும் விற்பனை ஆனது. இந்த வாரம் மொத்த 2632-பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
இந்த தகவலை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலை செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்தவாரம் மூலனூர் மற்றும் வேளாம்பூண்டி, சின்னமருதூர், கிளாங்குண்டல், வடுகபட்டி, கன்னிவாடி, பொன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிர்செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
இந்த பருத்திகளை வாங்குவதற்காக அன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், புஞ்சைப் புளியம்பட்டி, பல்லடம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் 247 விவசாயிகள் தங்கள் விளை நிளங்களில் விளைந்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
இந்த வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் முதல் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.6390-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.4500-க்கும் விற்பனை ஆனது. இந்த வாரம் மொத்த 2632-பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
இந்த தகவலை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலை செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X